நன்றுபத்து

அழையாதார் தன்மனையில்
நுழையாமை நன்று
அன்பில்லா விருந்துண்ண
விழையாமை நன்று
ஆன்றோர்க்கு தலைவணங்கி
வாழ்ந்திடுதல் நன்று
ஈன்றோர்க்கு இறுதிவரை
ஏவல் செய்தல் நன்று
உதறிவிட்ட உறவெனினும்
உதவிடுதல் நன்று
ஊதாரி பேர்வழிமுன்
ஒதுங்கிடுதல் நன்று
பழிகூறும்முன்னர் அதன்
வலியறிதல் நன்று
பாவச்செயல்களுக்கு
பழியஞ்சல்நன்று
செய்நன்றி மறவாத
மனம்பெறுதல்
செயல் தவறிவாழ்வதெனின்
இறந்திடுதல் நன்று..!

எழுதியவர் : asokan (2-Feb-14, 10:44 pm)
சேர்த்தது : கவிஞர் பெஅசோகன்
பார்வை : 51

மேலே