தலைகீழ்

நிச்சயதார்த்தம்ஆயிருச்சு..
புதுப்பெண்ணும்,புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...
ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.
பெண்: நீ என்னை விரும்புகிறாயா?
ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!
பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?
ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
பெண்: நீ என்னை அடிப்பாயா?
ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்.
பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?
(திருமணத்திற்குபின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.)

எழுதியவர் : முரளிதரன் (4-Feb-14, 6:00 pm)
Tanglish : thalaigeel
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே