பன் முகத் தேடலிலே
ஒரு முகம் கண்டு
மயங்கினாள்.
மறு முகம் நோக்கி
மருண்டாள் .
எம்முகம் உண்மையோ
எம்முகம் உறுதியோ
முகம் பார்த்து
பழகும் முறையோ
முகம் சொல்லும்
மனதின் உணர்வை
முகம் சொன்னது
இன்று ஒன்றாக.
முகம் சொல்லவில்லை
நாளை எனதாக.
முகமும் பொய் சொல்லும் போல்
பன் முகத் தேடலிலே