பார்வையில்லாதவனின் பரிதாபம்
Blind Person :
கண்கள் இருக்கிறது... பார்த்தால்
கருமையாய் தெரிகிறது..!
உங்களை பார்க்க துடிக்கிறேன்...
உதிக்கும் சூரியனை பார்க்க நினைக்கிறேன்..!
பாதையை கடக்க தடி வைத்து நடக்கிறேன்... என்
பார்வை கிடைக்க ஒவ்வொரு கடவுளிடமும் வேண்டுகிறேன்..!
இருண்டு போன என் பார்வைக்கு நிலவு தெரியவில்லை...
இரண்டு கண்கள் இருந்தும் என் முகம் பார்க்க முடியவில்லை..!