கவிதை எழுதுகிறேன் பரிசுக்காக

தூக்கம் ,துக்கம்
கலந்த இரவில்
கவிதை எழுதுகிறேன்
நாளை நடக்கவிருக்கும்
எதையோ எண்ணி
கவிதை எழுதுகிறேன்
தெரு பெற்ற பிள்ளை
கை நீட்டி யாசிப்பது போல்
கவிதை எழுதுகிறேன்....
வேற்று வாக்குறுதிகளை
ஏற்று வண்ண கனவுகளில்
கவிதை எழுதுகிறேன்...
நீர் நிலம் காற்று ஆகாயம்
வானம் வசப்படுமென்று
கவிதை எழுதுகிறேன் ...
சிந்திக்க தெரியாமல்
சந்திக்க முடியாமல்
கவிதை எழுதுகிறேன்....
பெண்ணை மதித்து
மண்ணை மிதித்து
கவிதை எழுதுகிறேன்...
சமூக அவலங்கள்
சுமூகமாக கவிதை எழுதுகிறேன்..
நிலாவை, சூரியனை விண்மீன்களை
விரட்டி விரட்டி
கவிதை எழுதுகிறேன்...

இன்னும் முடியவில்லை
தமிழும் மடியவில்லை...

கவிதை எழுதுகிறேன் பரிசுக்காக ...

எழுதியவர் : நந்துதாசன் வள்ளுவன் @த. நா (23-Feb-14, 11:56 pm)
பார்வை : 94

மேலே