என் இனிய நினைவுகளே

என் இனிய நினைவுகளே
என்னை விட்டு நீங்கதிர்கள்!!!

கனவுகள் புதைந்த
வாழ்வுதனில் கவிதைகள்
படைக்கும் கரங்கள் நாம்....

மகரந்தமாய் மனம் வீசும்
மதில் கொண்ட மல்லிகை நாம்....

சித்திரை மாத பௌர்ணமியில்
நான் நிலைக்கண்ட நேரங்கள் !!

மார்கழியின் கடுங்குளிரில்
நான் துயில் கொண்ட
என் காலங்கள் !!

பள்ளி செல்லும் வேலை
தனில் நான்
கண்ணீர் சிந்திய
என் தருணங்கள் !!

அம்மா இடும் மருதாணிக்காக
நான் தேடிய (திருடிய)
மாற்றான் தோட்டம்!!

காற்றாடி விடக் கற்றுத் தந்த
என் விரல் பிடித்த
என் வகுப்பு தோழன்!!

என அனைத்தும் பதிந்தது
என்னுள் ஒரு மென்பொருளாய்....

இயந்திரமான வாழ்வு தனில்
இமைக்க மறுக்கும் நேரம் தனில்
இயன்ற அளவு நீ இருந்தால்
என் உலகம் இயங்கும்
ஓவியமாய் !!!!

என் இனிய நினைவுகளே
என்னை விட்டு நீங்கதிர்கள்!!

எழுதியவர் : அருணா பொன்ராஜ் (24-Feb-14, 2:18 am)
பார்வை : 63

மேலே