அலைபேசி காற்றினிலே

நாளெல்லாம் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
அலைபேசி காற்றில் வரும்
உன் சுவாசம்..
நிஜமாய் நேரில்
வார்த்தைகளாய் பேசும்..

கடல் இல்லா தலைநகரத்தில் நான்..
கப்பல் இல்லா துறைமுகத்தில் நீ..
என் கவிதைகளால் காற்றலைகள்
கடல் அலை ஆனது..
உன் வார்த்தைகள் மிதந்து வந்து
நீ வரும் கப்பலாய் தெரியுது..

தொலைவிலிருந்தால் என்ன?
தொலைந்து விட மாட்டோம்..
தொலைவு இங்கே துயரம் இல்லை..
நீ இருக்கும் பூமியில்தான்
என் வானம்..
நான் ரசிக்கும் நிலவோடு தான்
உன் இரவும்..
தூது சொல்லி காதலிப்போம்
காற்றில் நாமும் கைபிடிப்போம்..
ஆனந்த ராகம் பாடுவோம்
அலைபேசி காற்றினிலே....

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (25-Feb-14, 12:12 pm)
பார்வை : 354

சிறந்த கவிதைகள்

மேலே