எல்லாம் தலைவிதி

(புதுசா பாலம் திறந்து, அதுல முதல்ல வர்ற வண்டிக்கு பரிசு குடுக்குறதுக்காக,காவல்துறை உயர் அதிகாரிகள்,பாலத்தின் முடிவில் நின்றிருந்தனர்.....வந்தது நம்மாளு வண்டி....)


அதிகாரிகள் : நிறுத்து...நிறுத்து....


நம்மாளு : சார்...சார்...மன்னிச்சுகிடுங்க சார்...வேகமா வண்டிய ஒட்டுனது தப்புதான் சார்...இனிமே இப்படி செய்யமாட்டேன் சார்..!


(பக்கத்தில் உட்கார்ந்திருந்த காது கேளாத நண்பன்...) : சார்...நான் அப்பவே சொன்னேன்...லைசென்ஸ் இல்லாம வண்டிய ஓட்டதடான்னு, சொன்னா கேட்க மாட்டேன்னுட்டான் சார்....


(அதுவரை தூங்கிக் கொண்டு, சத்தம் கேட்டவுடன் விழித்த மற்றொரு நண்பன்....அழுதுகொண்டே.. ): அய்யய்யோ....போச்சு, எல்லாம் போச்சு..... சார், நான் புள்ள குட்டிக்காரன் சார்...எனக்கு ஒண்ணுமே தெரியாது சார். சொல்ல சொல்ல கேட்காம காரை கடத்திக்கிட்டு வந்துட்டாங்கே சார்....எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல சார்....என்னைய விட்டுடுங்க சார்.....!

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Mar-14, 11:19 am)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே