ஒரு நாள் கனவில்-வித்யா

இமைகளில் உறங்கி
இதயம் தழுவி
உணர்வுகள் வழியே
உள்நுழைந்து
ரகசிய அரங்கேற்றம்
செய்கிறாள்..............!

அவள் ஒற்றை
முத்தின் ஒளிகொண்டு
பாதங்கள்
செய்தேன்........!

ஒற்றை புன்னகையின்
சாயல் கொண்டு
இதழ்கள்
செய்தேன்.........!

நயன பாசையின்
தாக்கம் கொண்டு
விழிகள்
செய்தேன்...........!

என் கனவுகளை
என்னவெல்லாம்
செய்தாயடி.......
உன் அங்கங்கள்
செதுக்கி கொண்டன...........!


என் கனவுகள்
அவள் அழகின்
பலி பீடத்தின் மீது
பரிமாறப்பட்ட
அந்த ஓர் நாள் இரவில்
ஒரு சிமினி விளக்கின்
ஒளியில்.............
நான் சிற்பியாக.....
அவள் சிலையாக.....






***********************சிற்பியின் கனவு தேவதை**************

எழுதியவர் : vidhya....... (4-Mar-14, 9:40 pm)
பார்வை : 115

மேலே