நீ நீ நீ

அதிகாலையில் தூவும்
அழகிய பனித்துளி நீ
அதை ஏந்தி நிற்கும்
அருகம் புல் நான
****
மலர்ந்து விரிந்த
ரோஜா மலர் நீ
உனை பாதுகாக்கும்
கூரிய முள் நான்
*****
ஒற்றையாய்
ஒரு நிலா நீ
உனக்கு துணையாய்
ஓராயிரம் விண்மீன் நான்
*****
மூங்கிலில் செய்த
குழல் நீ
மூச்சில் வெளிவரும்
நாதம் நான்
*****
சுட்டெரிக்கும்
சூரியன் நீ
சுகமாய் ஏற்கும்
கடுங்குளிர் நான்
*****
உனக்காகவே
காவியம் பாடுகிறேன் நான்
எனைக் காணவே
வெறுக்கிறாய் நீ
******