மாராப்பில் குடை கொண்டு வந்த மல்லிகையே 555
![](https://eluthu.com/images/loading.gif)
அழகே...
மழை சாரல் உன் மீது விழ
குடை கொண்டு வந்தேன்...
மழை சாரல் உனக்கு
பிடிக்கும் என்றாய்...
குடை தூக்கி
எறிந்தேன்...
மழை சாரல்
என்னை நனைக்க...
உன் தாவணியால் எனக்கு
குடை பிடித்தாய்...
சாரலில் நான்
கண்களை சிமிட்ட...
என்னை
கட்டியணைதாயடி...
குடை கொண்டு
ஓடி வந்தாய்...
குடை இருந்தும்
நனைந்தேனடி...
உன் முத்த
மழையில் நான்...
உன் ரேகை பதிந்த
குடை கம்பியை...
எப்படி பாதுகாப்பேன்
உன் ரேகை அழியாமல்...
மாராப்பில் குடை கொண்டு
வந்த என் மல்லிகையே...
மீண்டும் வேண்டுமடி
மழை சாரல்...
என்னை நீ
கட்டியணைக்க.....