மறக்க மறுக்கும் நெஞ்சம்

நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்
உன் விழிகள் எனை பார்க்க மறுத்ததால் ;
இறைவனை வணங்க மறுத்துவிட்டேன்
உன்னை எனிடம் இருந்து
பிரித்த காரணத்தால் ;
இயற்கையை ரசிக்க மறந்துவிட்டேன்
உன்னை ரசித்த கண்களால் வேறதையும்
ரசிக்க இயலவில்லை என்பதனால்;
கண்ணாடி பார்ப்பதை குறைத்துவிட்டேன்
உன் பின்பங்கள் என் கண்களில் தோன்றுவதால்;
வெளிச்சத்தில் நடப்பதை தவிர்த்துவிட்டேன்
என் நிழல் எனை விட்டு உனை
நோக்கி பயணிப்பதால் ;
அனைத்தையும் நிறுத்திய என் நெஞ்சம்
உனை நினைப்பதை மட்டும் நிறுத்த
மறுக்கிறது ! மறக்கவும் மறுக்கிறது !

எழுதியவர் : lakshmiravi (14-Mar-14, 4:47 pm)
பார்வை : 130

மேலே