லட்சுமி ரவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லட்சுமி ரவி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Nov-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Jan-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நிதமும் கணிபொறியிடம் போரிடும் கன்னிப்பொறி ;)

என் படைப்புகள்
லட்சுமி ரவி செய்திகள்
லட்சுமி ரவி - லட்சுமி ரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2014 1:32 pm

என் தோல்வியை கண்டு என்றும்
நான் வருந்தியது இல்லை ;
என் தோல்வியால் வெற்றி கொண்டவரை
கண்டு மகிழ் கிறேன் ;
தன் கண்ணீரில் அனைவரையும் மகிழ்விக்கும்
அந்த வானத்தை போல !!

மேலும்

தொடர்ந்து எழுதுங்கள்.. முதல் கவிதை முத்து 05-Jul-2015 8:40 pm
நன்று 18-Jan-2014 10:59 pm
எழுத்தில் இணைந்த நட்பே..வருக..! உங்கள் முதல் பதிவு..அருமை..! வாழ்த்துக்கள்..!தொடருங்கள்..! எழுத்தில் ஓர் நட்பாய் குமரிபையன் 14-Jan-2014 3:55 pm
அழகு :) 13-Jan-2014 11:50 am
லட்சுமி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 6:57 pm

பட்டியலிட்டு பழகிட நண்பர்கள்
யாரும் இல்லை..
தொட்டிலிட்டு தாலாட்டிய தாயின்
அன்பும் கிட்டவில்லை..
திக்கெட்டும் வெறுமை..
தனிமையின் துணையோ கொடுமை...

உறுதி கொள் என் மனமே!
மண்ணில் கம்பீர உலா
போகும் சூரியப்பெண்ணே !
எழுச்சி கொண்டு போரிடு,
வலிகள் இல்லா வழியேது !!

மேலும்

வலிகள் இல்லா வழி எங்கே உள்ளது... அது மரணத்தின் வழியாக கூட இருந்து விடலாம்... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 12:56 am
சூரியப் பெண்ணே என்பது புதுமை.. கவிதை இனிமை 05-Jul-2015 8:37 pm
லட்சுமி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2015 8:36 pm

"நலம்.. நலமறிய ஆவல்.."
எனும் என் மடலை
முன்பு தாங்கிய
அஞ்சல் பெட்டியை
காணவில்லை!!

யாரேனும் அதை காண
நேரிட்டால் ,கவிதை
யின் முதற் வரியை
அதனிடம் சமர்ப்பிக்கவும்.

மேலும்

ஹா ஹா... அருமை... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Jun-2015 1:58 am
லட்சுமி ரவி - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2015 6:41 pm

இறைவன் கொடுத்த,
இலவசப் புடவையில்
சாயம் போகின்றதாம்...
வருத்தத்தில்,
வண்ணத்துப் பூச்சிகள்......!

மேலும்

மிக்க நன்றி தோழி..... 20-Jun-2015 10:32 pm
மிக்க நன்றி தோழி..... நான் தோழியல்ல தோழன்..... அகத்தியா (ராஜ்கமல்) 20-Jun-2015 10:32 pm
அருமை !! 20-Jun-2015 7:35 pm
வரிகள் அழகு தோழி !!! வலிக்கவும் செய்கின்றன ....................... 20-Jun-2015 6:58 pm
லட்சுமி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 4:47 pm

நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்
உன் விழிகள் எனை பார்க்க மறுத்ததால் ;
இறைவனை வணங்க மறுத்துவிட்டேன்
உன்னை எனிடம் இருந்து
பிரித்த காரணத்தால் ;
இயற்கையை ரசிக்க மறந்துவிட்டேன்
உன்னை ரசித்த கண்களால் வேறதையும்
ரசிக்க இயலவில்லை என்பதனால்;
கண்ணாடி பார்ப்பதை குறைத்துவிட்டேன்
உன் பின்பங்கள் என் கண்களில் தோன்றுவதால்;
வெளிச்சத்தில் நடப்பதை தவிர்த்துவிட்டேன்
என் நிழல் எனை விட்டு உனை
நோக்கி பயணிப்பதால் ;
அனைத்தையும் நிறுத்திய என் நெஞ்சம்
உனை நினைப்பதை மட்டும் நிறுத்த
மறுக்கிறது ! மறக்கவும் மறுக்கிறது !

மேலும்

அதுதான் காதல்... ஒரு தடவை வந்துடுச்சுனா பல தடவை யோசிக்க வைக்கும் தோழரே....! கவிதை வலிகள்....! 16-Mar-2014 6:27 pm
மிகவும் அருமை! 14-Mar-2014 7:50 pm
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ! நினைவால் என்னை கொல்லுராயே கனவில் என்னை தின்னுராயே ! மொத்தமாய் என்னை அள்ளுராயே நிஜமாய் வர மறுக்கிறாயே ஏன் ?????? நினைவலைகள் நன்று 14-Mar-2014 6:24 pm
மன்னிக்கவும் தோழி :) நல்ல படைப்பு ! :) 14-Mar-2014 6:09 pm
லட்சுமி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 4:27 pm

Mannil naan ovoru murai
veelum podhu
kadal alaigal en sevi kooriya
seidhi iduve
"veelvadhu eluvadharkagave ! "

மேலும்

லட்சுமி ரவி - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2014 7:12 pm

அன்பே,
உன்
கண்சிமிட்டலைக்
காப்பியடித்துத்தான்
கடவுள்
பட்டாம்பூச்சியைப்
படைத்திருப்பார் !

மேலும்

தங்கள் கருத்தும் அழகு ! நன்றிகள் ! 25-Mar-2014 3:43 pm
அடடா! கவிநயம் அழகு! 25-Mar-2014 3:38 pm
கருத்துக்கு நன்றி நண்பரே 17-Mar-2014 7:26 pm
பிரமாதம் 17-Mar-2014 9:18 am
லட்சுமி ரவி - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2014 7:17 pm

அன்பே !
நிறுத்தத்தில் நீ
நின்றிருந்தால்
பேருந்து என்னைத்
தவறவிடுகிறது !

மேலும்

நீங்களே இப்படி இரசித்தால் நாங்கள் எப்படி ரசிப்போம் ! கருத்திற்கு நன்றி 25-Mar-2014 3:42 pm
படமும் கவிவரியும் அழகு! படத்தையே பார்த்துட்டிருக்கலாம் போல........அவ்ளோ க்யூட்! 25-Mar-2014 3:35 pm
எனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன் ! கருத்துக்கு நன்றி நண்பரே ! 13-Mar-2014 11:33 am
புரிந்ததைதான் முதலிலும் பதித்தேன் ! இனிய இரவாகட்டும் ! 12-Mar-2014 9:28 pm
லட்சுமி ரவி - அப்துல் வதூத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 12:34 am

எல்லா கோள்களையும்
ஆளவல்ல செங்கோல்!

விழுதுபோல்
மண்ணில் நம்பிக்கை
வேர்பிடிக்கும்
எழுதுகோல்!

உன் 'மை' யானாலும்
என் 'மை' யானாலும்
எம்'மை' யானாலும்
உண்மையான நன்'மை' ஈந்து
நம்மை காக்கும்
நம் 'மை'ந்தன்

எழுத்துக்கடலில்
காகிதக்கப்பலை
சத்தியக்கரை நோக்கி
செழுத்தும் துடுப்பு!

ஆறாம் விரலாய் இருந்த
எழுதுகோல்
'ஒரு ஊர்ல ஒரு எழுதுகோல்'
என்று வருங்கால கதையின் நாயகனாகிவிடுமோ?
என்ற கேள்விக்கு
பதிலாகும் ஆச்சர்யக்குறி!

மேலும்

மிக்க நன்றி வேலாயுதம் அவர்களே 14-Mar-2014 9:30 pm
உங்கள் மேற்கோளை ஏற்றுக்கொள்கிரேன் குமரிக்குமரன் அவர்களே ( இப்படி மாற்றினாலும் உங்கள் பெயர் நன்றாக உள்ளது 😊) 14-Mar-2014 9:29 pm
"எழுத்துகோல்" எழுதிய விதம் நன்று..! 14-Mar-2014 4:03 pm
மிக அருமை 14-Mar-2014 1:52 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே