எனக்கென ஒரு கவிதை

பட்டியலிட்டு பழகிட நண்பர்கள்
யாரும் இல்லை..
தொட்டிலிட்டு தாலாட்டிய தாயின்
அன்பும் கிட்டவில்லை..
திக்கெட்டும் வெறுமை..
தனிமையின் துணையோ கொடுமை...

உறுதி கொள் என் மனமே!
மண்ணில் கம்பீர உலா
போகும் சூரியப்பெண்ணே !
எழுச்சி கொண்டு போரிடு,
வலிகள் இல்லா வழியேது !!

எழுதியவர் : லட்சுமிரவி (5-Jul-15, 6:57 pm)
பார்வை : 126

மேலே