தேர்ஆறுதல் கவிதைகள்

தேர்{ஆறு}தல் கவிதைகள்
*
வெற்றி பெறுவதற்கு
யாகம் செய்கிறார்கள்
வேட்பாளர்கள்
*
சுறுசுறுப்பாகச் சுற்றிய
சுயமரியாதைப் பம்பரம்
தாமரையிடம் தஞ்சம்.
*
வாரிசுகள் வருகை
வரவேற்கிறதா? வெறுக்கிறதா?
வருங்கால அரசியல்.
*
கையெடுத்து கும்பிடுகிறார்கள்
காலில் விழுந்து எழுகிறார்கள்
ஐந்தாண்டுகளுக் கொரு முறை.
*
எதிர்ப்பு, குழப்பம், மௌனம்
மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள்
தாமரை இலைத் தண்ணீராய்…

எழுதியவர் : ந.க.துறைவன் (22-Mar-14, 10:40 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 65

மேலே