வலி
ஒரு பொய்யால்
உன்னை புன்னகிக்க
வைக்க முடிந்தது..
அனால் உண்மையால்
உன் உறவை
பாதுகாக்க முடியவில்லையே..!
கருவுற்ற தாயின்
வயிற்றிற்குள் உள்ள
கருவாக..
என் மனதிற்குள்
நம் காதலை உயிராக்கி
வைத்திருந்தேன்..
உன் பாசத்தால்
என்னை பிரசவித்து விடு
வலி இல்லாத
பிரசவம்
என்னவென்று
நானும் தெரிந்துகொள்கிறேன் ..!!