suganya raj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  suganya raj
இடம்:  chidambaram
பிறந்த தேதி :  04-Nov-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2013
பார்த்தவர்கள்:  980
புள்ளி:  130

என்னைப் பற்றி...

..

என் படைப்புகள்
suganya raj செய்திகள்
suganya raj - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2016 12:53 pm

பண்டைய தமிழன் மறந்த மொழி!
பாடல்களில் மட்டுமே பதியப்படுகின்ற மொழி !!

பால் பற்கள் உச்சரிக்க மறந்த அழகு தமிழ் சொல்
தற்போது பிச்சைக்காரர்களுக்கு சொந்தமாகிவிட்டதே!...
ஏன்;;??

பல படைப்பாளிகள் பிறந்ததோ தமிழ் மண்ணில்
அனால்
அடிமையானதோ அந்நியரின் சில்லைறைக்கோ ???

தாவரங்கள் கூட தலை அசைக்கும்..
எம் தமிழ் மைந்தன்..
காலடி ஓசை கேட்கும்போதெல்லாம்!!
ஓசைக்கு பெயரும் வைத்தான் !
ராகம் என்றும்! தாளம் என்றும்!!

மெட்டுக்கள் இசைத்த என் தமிழ் மங்கையரின்
விழித்துடிப்புகள் எங்கே போனது??
மஸ்காரா போட்டு மறைத்தது
மங்கையரின் கண்களை மட்டுமல்ல !!
பல ஆயிரம் காதல் கவிதைகளையும் தான்!!

தாலாட்ட

மேலும்

suganya raj - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2014 1:30 am

பொதுவாக
பெண்களை தான்
பூக்களை கொண்டு வர்ணிப்பார்கள்
அதனால் தான்
உன்னை வாழ்த்த
பூக்களிடமே சென்று
வாழ்த்து மடல் எழுதி
வாங்கி வந்தேன் !!

ரோஜா பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் நாங்களே ரசிக்கும் ரசிகன்
அதனால் வாழ்த்த எங்களுக்கு தகுதி இல்லை என்றது

மல்லி பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட மேன்மையானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது

அள்ளி பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட அன்பானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது

தாமரை பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதிய் வாங்க
அவன் எங்களை விட தன்மையானவன்

மேலும்

suganya raj - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2014 9:51 am

விரும்பும் போதெல்லாம்
வெறுக்க நினைக்கும்
உறவுகளை
விட

வெறுக்கும் போது கூட
நம்மையே விரும்பும்
தனிமையே
சுகம்தான்...!!

மேலும்

சிந்தனை நன்று 29-Aug-2014 10:18 pm
மாறுபட்ட மகத்தான சிந்தனை !! வாழ்த்துக்கள் !! 29-Aug-2014 10:45 am
நன்று. 29-Aug-2014 10:15 am
suganya raj - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2014 7:30 pm

நீல
மேகங்கள்
சூழ ...!

டும் டும்
இடி ஒலிகள்
தாளங்கள்
தட்ட..!

பளிச் பளிச்
மின்னல்கள்
மின் விளக்குகள்
தோரணம் இட..!

சூரியன்
மறைந்து
ஆனந்த
கண்ணீர் விட..!

தூரல்கள்
மாலை
தோரணமாய்
தொங்க..!

மேகம் எனும்
மணவாளன்
பூமி எனும்
புனிதவதிக்கு ..!

கட்டுகிற
தாலி
தான்
இந்த
மழையோ???

மேலும்

அருமை 19-Jul-2014 12:26 pm
ஆஹா அழகு :) 03-Jul-2014 1:17 pm
அட...நல்ல கற்பனை...இன்னும் சிறக்கட்டும் சிறகு விரிக்கட்டும் 14-Jun-2014 7:23 pm
எண்ணம் சிறப்பாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள் 28-May-2014 8:45 pm
suganya raj அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 11:49 am

"அம்மா"
அழுகையை அமர்த்தும் சொல்
அவள் பால் ஊட்டும் வரை...!

"அம்மா"
மழலை மொழிக்கு முதல் சொல்
மற்ற மொழிகள் அறியும் வரை...!!

"அம்மா"
அன்புக்கு பிறிதொரு சொல்
அபிமானம் மாறும் வரை...!!

"அம்மா"
அரவணைக்கும் சொல்
அழுகை குறையும் வரை...!!

"அம்மா"
கவலையை குறைக்கும் சொல்
கண்டிப்பை தொடங்கும் வரை...!!

"அம்மா"
இனிமையான சொல்
இன்னொருவள் கிடைக்கும் வரை...!!

"அம்மா"
முன்னேற்றம் தரும் சொல்
முடிவை அறியும் வரை,,,!!

அனால்
எனக்கு


"அம்மா"
என் உயிரில் கலந்திட்ட சொல்
உயிர் பிரியும் வரை ...!!

மேலும்

அம்மா, நம் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் கடவுளே !!!!!!!!!!!! வாழ்த்துக்கள் 19-Sep-2014 11:41 pm
ஈடு உண்டோ அவளுக்கு இணை அழகு :) 03-Jul-2014 1:18 pm
நன்றி தோழா 25-May-2014 1:54 pm
கவி நடை சிறப்பு . அம்மா அன்பு நெகிழ்வு.. எல்லாருக்கும் அம்மா உயிரில் கலந்தவள்தான். உணராதவர் சிலர் ஆட்டம் ஆடுவார். . 24-May-2014 9:23 pm
suganya raj - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2014 3:45 pm

நான்கு ஆண்டுகள்
கருவில் சுமந்து வந்த கல்லூரி
கருகலைப்பு செய்கிறது ஏனோ இப்போது...!

என் கண்களில் கண்ணீர் துளிகள் சிந்த
கற்பனை செய்து பார்க்கிறேன்
என் கல்லூரி நாட்களை..!

அறிமுகம் இல்லாது நுழைந்த
முதல் நாள் கல்லூரி
கண்கள் எட்டும் தூரம் வரை புது முகங்கள்...!

வேடிக்கை பார்த்து
நான்கு நிமிடங்கள் ஆகிறது
என்று என்னும் தருணம்
முடிவடைந்து விட்டது நான்கு வருடங்கள்...!

நாங்கள் விளையாடின வகுப்பறைகள்
சுற்றித்திரிந்த விளையாட்டு மைதானங்கள்
கேளிக்கை செய்த ஆண் பெண் நண்பர்கள்
கடிந்தும் கவனித்து கொள்ளும் ஆசிரியர்கள்...!

தோழமையின் பெயரில்
தாய்கள் பல கண்டோம்
படைத்த இறை

மேலும்

நெஞ்சம் கனக்கிறது தோழரே இன்று நினைத்தாலும்... இதை அனைவரும் கடந்து தான் ஆகா வேண்டும்! அதுவே எதார்த்தம்ங்க. 16-Aug-2014 3:51 pm
என் நெஞ்சிலே சிலிர்ப்பை ஏற்படுத்தியது உங்கள் கவி அழகோ அழகு 16-Aug-2014 11:10 am
மறக்க முடியாத நினைவுகள் மறக்க முடியாத வாழ்க்கை அழகு :) 03-Jul-2014 1:19 pm
நல்ல நினைவுகள். 06-Jun-2014 3:52 pm
எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) skmaheshwaran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-May-2014 1:50 pm

திரை சீலை சீதனமும்!
தெருவெங்கும் தோரணமும்!
மத்தாப்பு சுட்டு போடும்
மஞ்சள் வெயிலும்!
மணமேடை சுத்தி வரும்
சின்னஞ் சிறுசும்!
கல்யாண சேதி சொல்லும்
கொட்டு மேளமும்!
புழக்கடையில் வந்து நிற்கும்
கறி கிடாவும்!
கல்யாண சொந்தம்தானே
எப்பொழுதுமே!!!

வாழையிலை வரைந்திடுமே
மதுரை ஓடும் வைகையினை!
திண்ணை எல்லாம் சேர்த்திடுமே
தென்பொதிகை திருத் தமிழை!
கோலம் போடும் பதுமைகளை
குறிசொல்லி கவிழ்த்திடவே கூடிடுதே
காளையெல்லாம் கூட்டம் கூட்டமாய்!!!
சீரு செய்யும் மாமன்
சோறும் எடுத்து கட்டும்
எதுத்த ஊரும்!
பந்தயம் இங்கே பட்டாசாக
வெடிச்சு சிதறும்...

கூரை சேலை சேதி
சொல்லும்! கூனி கிழ

மேலும்

நன்றி தோழி... 14-May-2014 9:39 am
அருமையான வரிகள்... 13-May-2014 6:32 pm
ஒரு திருமணதிற்கு சென்று வந்தது போல் இருக்கிறது. அத்தனை நிகழ்வுகளையும் வரிசை கிரமமாக எடுத்துச் சொன்ன விதம் அருமை. கேலி பேசும் ஊரெல்லாம் காலி செய்யும் நேரமிது! கட்டாந்தரை காளை கண்ணயர காத்திருக்கும் அந்தக்காளை பொண்ணுவர! ஏத்தி வச்ச வெளக்கல்லாம் ஏமாந்து போகும் இங்கே! கித்தாப்பாய் நிற்கும் இந்த மல்லு வேட்டிக்கும்! மணப்பொண்ணு சூட்டி வந்த மஞ்ச பொடிக்கும் மந்தையிலே ஜல்லிக்கட்டு நடக்கும் இப்போ ! === சொல்லாடல் அருமை "மஞ்ச தாலி கயிறோடு மச்சுவீட்டு படி ஏறும் மணப்பொண்ணு சொல்லி போகும் நேரம் இது ! மத்தியான வெயிலோடு மல்லு கட்டும் பொண்ணு வீடும்! கண்ணீரும் கலவையாகும் இந்த நேரம்! கசிந்தோடும் காதலிலே கரம் சேர்த்த கன்னியவள் நேசமும் விம்மிடுதே வாசல் வலி தேடயிலே... " மணமுடித்து தாய் வீட்டை விட்டுப் பிரியும் பெண் திருமண மகிழ்ச்சியை கூட மறந்து அழுதுவிட்டுதான் புறப்படுகிறாள். அழகாக கூறி இருக்கிறாய். "கரம் சேர்த்த கன்னியவள்"== திருமணம் முடித்து எல்லாமும் முடித்து திரும்பும்போது அவளை கன்னி என்று கூற இயலாது. கன்னியவள் என்பதை மாற்றவும். மொத்தத்தில் கவிதை அருமை மகேஸ்வரன். 13-May-2014 5:21 pm
suganya raj அளித்த படைப்பில் (public) Ravisrm மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-May-2014 9:37 pm

என் காதலுக்கும்
உன் காதலுக்கும்
இடையே
இருக்கும்
ஒரே
உறவு

நம் கண்ணீர் தான்!!!

மேலும்

மிகவும் அருமை இன்னு பல கவிதைகள் எழுதிட விரும்புகிறேன் வாழ்த்துக்கள் தோழி 12-May-2014 8:48 pm
வரிகள் அருமை!.. 11-May-2014 9:50 pm
ம்ம் பெரும்பாலான காதலர்களுக்கு இது தாம் மொழி போலும்; கண்ணீர். படைப்பாக அருமை 11-May-2014 8:41 pm
அப்படிஎன்றால் சரி , அனுபவ வலிகள் அனுகூல வரிகள் . 10-May-2014 8:09 pm
suganya raj - suganya raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 8:48 pm

ஒரு பொய்யால்
உன்னை புன்னகிக்க
வைக்க முடிந்தது..

அனால் உண்மையால்
உன் உறவை
பாதுகாக்க முடியவில்லையே..!

கருவுற்ற தாயின்
வயிற்றிற்குள் உள்ள
கருவாக..

என் மனதிற்குள்
நம் காதலை உயிராக்கி
வைத்திருந்தேன்..

உன் பாசத்தால்
என்னை பிரசவித்து விடு

வலி இல்லாத
பிரசவம்
என்னவென்று
நானும் தெரிந்துகொள்கிறேன் ..!!

மேலும்

நல்ல கற்பனை. அழுத்தமான கருத்து. 09-May-2014 9:39 pm
உணர்வு மென்மையாய் வெளிப்பட்டது! 26-Mar-2014 7:39 am
அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2013 7:38 am

உலகத்தின் தாய் அந்த உழைப்பாளி!
ஊருக்கே சோறு போடும் விவசாயி!
உலகத்தை முன்தள்ளும் உழவன் அவன்!
உழவனை பின்தள்ளும் உலகம் இது!

உணவேதும் நமக்கில்லை அவனின்றி.
உணவென்று ஏதுமில்லை அவனுக்கு.
பால் குடித்த மார்காம்பை கடித்துவிட்டோம்.
சோறூட்டிய விரல்களை ஒடித்துவிட்டோம்.

செந்நீரும் கண்ணீரும் சிந்திவிட
மண்நீரில் தண்ணீர் கலந்துவிட
பதநீரும் இளநீரும் நாம் பருக
பாடுபடும் நம் நண்பன் விவசாயி!

இயற்கைக்கு கேடு செய்யும் நம்மை போல
இயற்கையும் பலசமயம் பொய்த்துப்போக
இயற்கையின் அச்சாணி அவன் வாழ்வு
இயற்கை எய்த காரணமாய் ஆகிறதே!

மண்மீது வைத்த நம்பிக்கை மண்ணாகிப்போக
விண்மீது வைத்த நம்பிக்கை வீண

மேலும்

அனைத்து வரிகளும் அருமையாக உணர்வை தூண்டும் வகையிலும் சிந்திக்க கூடிய வரிகளாக உள்ளது 07-Sep-2014 8:30 pm
மிகசிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் தோழமையே ! 07-Sep-2014 8:03 pm
நெஞ்சைத் தொட்ட வரிகள் அருமை அருமை 08-Mar-2014 3:26 pm
மிக அழகான வரிகள் ....அருமை.... 08-Mar-2014 3:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (138)

தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
காஜா

காஜா

udumalpet
சந்திரா

சந்திரா

இலங்கை
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (138)

சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
user photo

tamilpiriyan

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (138)

springsiva

springsiva

DELHI
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
மேலே