கிறுக்கல்
கருத்துவேண்டி காத்திருக்கேன்
கவிதையாய் பூத்திருக்கேன்
கண்டுகளித்து படித்துவிட்டு
காணாததுபோல் போவீரோ ....!!
காசுபணம் தேவையில்லை
கடனெதுவும் கேட்கவில்லை
கடுகளவும் காட்டமில்லை
கட்டாயம் ஏதுமில்லை ....!!
புள்ளிவழங்க கோரவில்லை
பரிசுவாங்க ஆசையில்லை
பண்பட்டு திருத்திக்கொள்ள
பதிவிடுவீர் எண்ணமதை ...!!
கருத்துப்பூக்கள் மலர்ந்திட்டால்
கட்டியதை சரமாக்கி
காணிக்கையாய் நினைத்திடுவேன்
காரிகைநான் அகமகிழ்வேன் ....!!
வெட்டியென எண்ணாதீர்
வெறுத்தென்னை ஒதுக்காதீர்
வெயிலின் தாக்கத்தில்
வெகுளியாய் எழுதிவிட்டேன் ...!!