நான் உன்னைக் காதலிக்கிறேன்

உன்னைக் கண்ணெதிரில் கண்ட கணமுதலே
காதல் வாசம் நுகர்ந்தேன்...!

நீ அருகில் வந்துவிட்டால் நெடுந்தூரம் கடந்தது போல்
மூச்சு வாங்கி உறைந்தேன்...!

தனிமை என்றஒரு புதிய நட்பைநான்
தேடிக் கண்டு பிடித்தேன்...!

முட்கள் நடுவினிலே ரோஜா இருப்பினுமே
அதை முத்தமிடவேநான் துடித்தேன்...!

நடக்கும் பாதையெல்லாம் நேராய் இருப்பினுமே
கைரேகை போல முழித்தேன்...!


உன் இதழில் இருந்து மலர்வாசம் பிறந்தது போல்
என் பெயரைச் சொல்லி அழைத்தாய்...!

திரும்பிப் பார்த்தவுடன் நெஞ்சம் அறிந்தது
அது உண்மை அல்ல பிரம்மை...!



விண்மீன் கூட்டமெல்லாம் தொங்கும் தோட்டமென
மனது பாடம் படிக்கிறதே...!

என் விழியின் இருப்பிடத்தை செதுக்கி நிறுத்துகின்ற
மர்மம் உன்னில் இருக்கிறதே ...!

மனதின் ஏக்கமிது கையில் கூடிவிட்டால்
அதனினும் சொர்க்கம் ஏதுமில்லையே...!

தேடிப் பார்க்கிறேன் ; விழி மூடிப் பார்க்கிறேன் ; மனதில் மூன்று வார்த்தை மட்டும் என்னைத் தாங்க நிற்கிறேன்...!
அது “நான் உன்னைக் காதலிக்கிறேன்” ....!
( I LOVE YOU)

எழுதியவர் : மு.ஜீவராஜ் (1-Apr-14, 2:26 am)
சேர்த்தது : மு.ஜீவராஜ்
பார்வை : 112

மேலே