கண்ணீருடன் ஒரு காதல்

என் காதலை அழித்து விட்டாய் அடி என் கண்ணே..!
அந்த கடவுள் படைத்த பொய்கள் எல்லாம் பெண்ணே..!
உன் துப்பட்டாவில் என் காதலை தூக்கில் போட்டாயே..!
என்றும் என்னை கண்ணீர் கடலில் தவிக்க விட்டாயே..!

எரிமலை குழம்பினை இதயத்தில் ஊற்றினாய்..!
எமனின் முகவரி கண் முன்னே காட்டினாய்..!
வெண்ணிலா ஒளியினை ரசித்தது பாவமா..!
கண்களை இரவலாய் கேட்பது நியாயமா..!

என் காதல் என்ன காட்டில் பற்றிய தீயா..!
அதை பற்ற வைத்த தீப்பொறி பெண்ணே நீயா..!
ஏவாள் பெண் என உன்னை விரும்பினேன்..!
வௌவால் போல என் வாழ்கை தலைக்கீழாய் தொங்குதே..!

வீசும் புயலுக்கு புல்லின் வலி தான் தெரியுமா..!
நேசித்த என் இதயத்தை தீட்டால் கூட உன் நினைவு தான் அழியுமா..!
என் காதல் இன்று உடைந்து போன கண்ணாடி..!
அதை சிதற வைத்த கல் உந்தன் சொல்லடி..!

உன் துப்பட்டாவில் என் காதலை தூக்கில் போட்டாயே..!
என்றும் என்னை கண்ணீர் கடலில் தவிக்க விட்டாயே..!

கண்ணீருடன்..!
ஜெய்

எழுதியவர் : Jaya Ram Kumar (3-Apr-14, 12:34 am)
பார்வை : 966

மேலே