இல்லறமே இம்சைதான்

கூண்டுக்குள் கிளிபோல
பெண்களை அடைத்திடுவார்
கூடவே சிறகுவெட்டி
திறமைகளை முடக்கிடுவார் ...!!

தன்னிலும் பேரெடுத்தால்
பொறாமையில் வெந்திடுவார்
தன்னிலை உணர்ந்தவுடன்
தாழ்ந்துமனம் வெம்பிடுவார் ....!!

தவறுகள் சுட்டிடிலோ
திமிரானவள் என்றுரைப்பார்
தட்டிக்கேட்டு விட்டாலோ
அடங்காப் பிடாரியென்பார் ....!!

குனியக்குனிய குட்டிடுவார்
நிமிர்ந்திடில் பழித்திடுவார்
குறைபேசிக் கழிப்பதனால்
குடும்பத்தில் அமைதியுண்டோ ...!!

மதித்து மனைவியை நேசித்தால்
இல்வாழ்க்கை இனிமையாகும்
மறுத்து வாட்டி வதைத்திடிலோ
இல்லறமே இம்சையாகும் ......!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Apr-14, 10:41 pm)
பார்வை : 256

மேலே