அத்தைக்கு மகளாய்
என் செல்லம்மா..
செல்ல அத்தையம்மா..
அத்தை இங்க அம்மாவான
கதையை கொஞ்சம் சொல்லம்மா..
கோடி தவம் செய்யலையே
கிடைச்ச வரம் நீயம்மா..
தாய் மடியில கிடைச்ச சுகம்
உன் அணைப்புல கொடுத்தம்மா..
கண்ணம்மா..
என் பொன்னம்மா..
நான் தொட்டு பார்த்த வெண்ணிலவு
உன் மனசு தானம்மா..
அடியும் உதையும் வாங்குறாங்க
அக்கம் பக்கத்து பொண்ணுங்க..
என் தும்மலுக்கும் துடிச்சு போகும்
உனக்கு நிகர் யாரம்மா..
நூறு பவுன் நகையை கேட்டது
தெருக்கோடி பெண்ணம்மா..
நூல் கூட தேவையில்ல
நீ எனக்கு சொன்னம்மா..
உங்க மகனை கைபிடிச்சு
வீட்டுக்குள்ள வந்தேன்மா..
கோவில் போல குடும்பம் இது
கொடுத்து வச்சவ நானம்மா..
பேரன் பேத்தி அள்ளி கொஞ்ச
ஆசை உனக்கு அதிகம்மா..
அந்த நேரம் பிள்ளையாக
நானும் மாறி போவேன்மா..
மணிகணக்கா பேசி தீர்த்த
கதையெல்லாம் அம்மம்மா..
ஊரு உலகம் கண்ணு போடும்
திருஷ்டி சுத்தி போடம்மா..
மேகம் மேல ஏறி சொல்வேன்
அதிர்ஷ்டசாலி நானம்மா..
தங்கமெல்லாம் தோத்து போகும்
நல்ல மனசு உனக்கம்மா..
ஆயுள் முழுசும் பத்தலையே
அன்பு மழையில் நனையம்மா..
ஆண்டவன் கிட்ட கேக்கலாமா
அடுத்த ஜென்ம உறவம்மா..