ஏக்கம்

ஏங்குகிறேன்….
தாய்மடி தவழ்ந்த்திட்ட
தருணம் நினைத்து
தினந்தினம் தலைவைத்து
உறங்கிட….

ஏங்குகிறேன்….
பல வண்ணம் மேவினும்
பகுப்பு மறந்து
ஒரு வானம் பறந்திடும்
பறவையாகிட….

ஏங்குகிறேன்….
தாகத்தில் தவித்தாலும்
தஞ்சம்டைந்தாருக்கும்
தண்மை வழங்கிடும்
தருவாகிட….

எழுதியவர் : அஞ்சா அரிமா (12-Apr-14, 5:44 pm)
பார்வை : 245

மேலே