ஆசை
“ஆசையே துன்பத்துக்கு காரணம்! ”
சொன்ன
புத்தர்
துறவியானார்..
துறவும்
ஆசைதானே…..???!!
இவரது ஆசையில்
துன்பப்பட்டது
இவரது மனைவியும் குழந்தையும் ……….
துறவியாகக்கூட
ஆசை
இருப்பதில்லை
வெறுமை
மனதை சூழும் போது… !
வெறுமைகள்
ஆசைகளை
அறவே
அகற்றுகின்றன !!