என்னை என்ன செய்யப் போகிறாய் - மணியன்

கண் இரண்டில்
கண்ணாமூச்சி காட்டி
பாதி அழிந்த என்
பாவப்பட்ட இதயத்தில்
பாண்டி ஆடுகிறாய் . . . . . . .

இன்று வரை
கனவில் மட்டும்
கால் நனைத்து
இன்முக முறுவலுடன்
இனிக்க இனிக்கப் பேசுகிறாய் . . . . . .

கனவினில் தினமும் வந்து
காதல் சொல்லி சிரிக்கின்றாய். . .
நனவினில் ஏனோ இன்னும்
நாடி பிடித்து நகைக்கின்றாய் . . . . .

தென்றலைத்
துணைக்கழைத்து
தேடி வந்து
என்னை மட்டும்
தேன் தடவிக் கிள்ளுகிறாய் . . . . .

உருகிடும் என் உணர்வுகளை
உள் நாக்கில்
உமிழ் நீர் சொட்ட
உன்மத்தமாய் பருகுகிறாய் . . . . . . .

நெற்றியில் உன்
வியர்வைத் துளி
எட்டிப் பார்த்து
எனை இழுக்க
சுட்டு விரல் தன்னால்
என் கனவுக் கூட்டில் தள்ளுகிறாய் . . . . .

பேசிட வாய்ப்பிருந்தும்
பார்த்திட மனமிருந்தும்
உதடு வரை
உரசி வரும்
உச்சரிப்பு வார்த்தைகளை
உள் மனதில் மெல்லுகிறாய் . . . . .

பாதித் தேய்ந்த
நிலவு பார்த்து
வளர் பிறையாய்
நான் ரசிக்க
தேய் பிறை என்று நீயும்
பொய் உரைத்துப் போகின்றாய் . . . . .

உணர்ச்சிகள் மண்டியது
உதிரமும் சுண்டியது
நினைவுகள் மயங்கியது
நெஞ்சமும் ஏங்கியது
ஏன் இன்னும் தாமதம்
என்னை என்ன செய்யப் போகிறாய் . . . . .


*----*---*---*---*---*---*---*---*---*---*

எழுதியவர் : மல்லி மணியன் (19-Apr-14, 5:10 pm)
பார்வை : 631

மேலே