புத்தர்

அமைதியை
புறத்தில் தேடாதே
அகத்தில் தேடு.

கடந்த காலத்தில்
புதையாதே!
எதிர் காலத்தின்
கனவுகளில் மிதக்காதே !
நிகழ் காலத்தில்
மனதை செலுத்தி வாழ் !

விலை மதிப்புள்ள
பரிசு
தேக ஆரோக்கியம்

விலை மதிப்பெற்ற
சொத்து
போதும் என்ற பொன் மனம்

உன்னதமான
வாழ்வு
உண்மையான உறவுகளில் !

கோபத்தை நிலை நிறுத்துவது
எரியும் கரியை
கைகளில் ஏந்துவதற்கு சமானம்
நம் கையையே அது சுட்டு விடும்

நாக்கு கத்தியை போன்றது
இரத்தம் வராமலே கொன்று விடும் .

என்ன செய்ய பட்டது
என்பதை பார்க்காதே

என்ன செய்ய வேண்டும்
என்பதை பார் !

நாம் எண்ணங்களினால்
உருவாக்க படுகின்றோம்
நாம் என்ன நினைக்கின்றோமோ
அதுவாகவே ஆகின்றோம்

மனம் தெளிவாக இருந்தால்
சந்தோசம் நிழல்
போல் அதை தொடரும் .

சந்தோசம் பகிர்தலால் என்றுமே
குறையாது .

ஓவியம் கிருபகணேஷ்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (20-Apr-14, 4:05 pm)
பார்வை : 1161

மேலே