தேர்தலின் முக்கியத்துவம் அறிவோம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
வருவது மகாமஹம் திருவிழா
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
வருவது தேர்தல் திருவிழா
மகாமஹம் கொண்டாடுவது பாவங்களை
கழித்து புண்ணியம் சேர்க்க
தேர்தல் திருவிழா நாட்டை கொள்ளைஅடிக்கும்
தலைவர்களில் யார் முதன்மை
என தேர்ந்து எடுப்பது மட்டுமே
உரிமையை விட்டுகொடுக்காமல்
சிந்தித்து நல்ல தலைவரை தேர்ந்தெடுப்போம்
என தீர்மானம் கொள்வோம்