அவளின் அவலம்

அவளின் அறையின் சுவரில்
எத்தனை குழந்தை ஓவியங்கள்
தொங்குகின்ற அவற்றில்
சிரிப்பு ,புன்னகை ,பாசம் ....
இன்னும் எத்தனை ரகம்

அவள் ...
ஒரு சாபம் பெற்றவள்
கருப்பை இருந்தும் அதில்
புழு பூச்சி இன்னும் தீண்டவில்லை

திருட்டு கழுதை
ஊமைச்சிருக்கி
மலடி ......
இவை அவள்
பல்கலைகழகம் நுழையாமல்
பெற்ற பட்டங்கள்

சுவரோடு இணைந்தபடி
அவள் விடும் கண்ணீர்
ஒரு தொடர் கதை பேசும்
அதற்கு வாயிருந்தால்
அவளின் அவலங்களை

அவளின் உடலில் மட்டுமே
உயிர் இருக்கிறது
அவளின் மனமோ
மண்ணறையில் என்றோ உக்கிப்போக

இறைவனின் இந்த விளையாடல்
இன்னும் தொடர
அவளோ இன்னும் இருக்கிறாள்
என்றோ கையில் தவழும் குழந்தைக்காக
இன்னும் நம்பிக்கையுடன் ......

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (25-Apr-14, 3:36 pm)
Tanglish : avalin avalam
பார்வை : 107

மேலே