நட்பிற்கு எல்லை இல்லை

என் மௌனமும்
நீ உணர்வாய்
என் புன்னகையும்
நீ அறிவாய்
சொல்லி விளக்கிடவே
ஓர் வார்த்தை தேவையில்லை!

யாரையும் வெறுத்ததில்லை
எவரையும் சினந்ததில்லை
என் கோபம்
என் தாபம்
அனைத்தையும் கண்டதுண்டு அவை
நொடியில் மறைந்திடுமே
பிடிவாதம் கொண்டதில்லை!

துன்பம் வந்திடினும்
இன்பம் பொங்கிடினும்
தோதாய் நான் சாய உன்
தோளில் இடம் தருவாய்
என் தோழன்
நீ இருக்க
நெஞ்சம் கனந்ததில்லை!

அன்பில் சில நேரம்
ஆதரவாய் சில நேரம்
நான் நினைக்கும் பொழுதெல்லாம்
கண் முன்னே நீ நின்றாய்
நீயும் என் சேயே
வேறு பார்வை தோன்றவில்லை!

தென்றல் திசை மாறும்
பருவம் அது தவறும்
நம் நட்பின்
உருவம் மட்டும் வாழும் எந்நாளும்
ஆழ் கடலும் அதன் எல்லை தொடும்
நம் நட்பிற்கு இல்லை எல்லையே!!!!

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி (27-Apr-14, 6:14 pm)
பார்வை : 367

மேலே