இரவில் மட்டும்

இன்னும்
எத்தனை நாள்கள்
இரவில் நனைவது
என் விழிகள் உறக்கமற்று.????
துக்கம் விற்ற காசுக்காய்
ஏக்கத்தோடு என் குடும்பம்
பல்சரில் சூதிபாடும் விடலைத்தம்பி..!
பருவம்தப்பிய திருமணமாக அக்கா.
பாதிவயதில் பறிபோன - என்
அம்மாவின் கனவுகள்.
திசைக்கொன்றன தோழர்கள்.
இன்னும்
எத்தனை நாள்கள்
இரவில் நான் நானைவது.???
அந்நிய தேசத்தில்
அடைக்கலம் நான். வசதிகள்
அனைத்தும் இருந்தாலும் - தினம்
அன்னை மண்ணுக்கு ஏங்கும்
அப்பாவித் தமிழன்தான்......!!!!
அண்ணன் தம்பியென்று
ஆயிரம் உறவுகள் அங்கு.
இங்கு இருண்டுகிடக்கிறது
இன்பமான எங்கள் வாழ்வும்..????
இருக்கும் வரை உறவுகள்.
இறந்திட்டால் எவரும் தேடிரார்.
உற்றதுணையின்றி பலர் இன்னும்
உறக்கமற்று தவிக்கிறார் உலகத்தில்
ஏது? எப்படியோ....!!!!!
இன்னும் எத்தனை நாட்கள்
இரவில் நான் தனிமையில் அழுவது......!