இவர்களிடம் கற்றுக் கொள்
ஓ மானிடனே !
பறவைகளைப் பார் !
தானே உணவைத் தேடி
உண்டு களித்து கவலையின்றி
அதன் சிறகுகளை விரித்து
இனத்தோடு கொஞ்சி கூடி
மகிழ்வதைப் பார் !
யாரிடமும் யாசகமுமின்றி
கேட்கும் திறனுமின்றி
பேசும் திறனுமின்றி
யாரிடமும் உதவி எதிர்பாராமல்
மவுனமாய் தியாகத்தில் தியானத்தில்
பறப்பதைப் பார்!
யார் உதவியுமின்றி தன் இனத்தை
தானே தன் கூட்டுக்குள்
எந்த மருத்துவரையும் நாடாமல்
முக்கி முனகி வழி(லி)யைத்
தாங்கியே பிரசவித்து
உயிர்ப்பிப்பதைப் பார்!
இவர்களிடம் மனித நேயம்
கற்றுக் கொள் மானிடனே!