எமக்கலை

எமக்கலை

செத்த பின்னரே
கொத்தித்தின்னும்
கழுகுகள் ...

காமுகப் பசிக்கு
கழுகுப் பார்வையாலே
உயிர் உள்ளபோதே -என்
உறுப்புகளை
கொத்தித் தின்னுகிறாயே
கொலைபாதகா ?

இளம் சிறார்களை
சிதைத்துவிட்டு
இன்னல்களின்றி
இனியும் நீ
உலவலாமோ ...

என் அனுமதியின்றி
எனைத் தொடும்
எவனையும்
எமனுக்கிரையாக்க
'எமக்கலையை '
எனக்களி
என் இறைவா ..

வம்சமே கருவறுத்தபின்
வந்து தருவேன் உன்னிடம்
பத்திரமாய்..

என் சிறார்களாவது
சிறகடிக்கட்டும்
பயமகன்று ...

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (4-May-14, 8:02 pm)
பார்வை : 87

மேலே