மழையின் கரிசனம்

நடு நடுங்குதே உலக மனம்
முதல் துளியிலே
வான உரசலில் கரு
மேக அணைப்பில் ...!

பதை பதைத்தப் புள்ளினம்
பட படத்தன சிறகுகளை
இனத்தோடு ஒண்டின மரங்களில் ...!

நீரோட்டம் வெள் ளென
நீரோடை ஓவியமாய்
தூரின சாரலில்
வெப்பத் தண ளெல்லாம்
வறண்ட மண்ணில் ..!

அற்புதங்கள் நிகழ்ந்ததைச்
சொல்லும் வான அறிகுறி
வானவில்லாய் இழுத்துப்
போர்த்துகிறது வண்ணச் சேலையை ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-May-14, 7:55 am)
பார்வை : 154

மேலே