உன்னுடன்,
பேச முடியாத வார்த்தைகள்
கண்ணீராய் விழிகளில்
பார்க்க முடியாத காலங்கள்
கற்பனையாய் கனவினில்
கடக்க முடியாத பாதைகள்
மாயையாய் என் வழிகளில்
போட முடியாத சண்டைகள்
புன்னகையாய் உதட்டினில்
வாழ முடியாது போன வாழ்க்கையோ
வரிகளாய் என் கவிதையில் !!