உன்னுடன்,

பேச முடியாத வார்த்தைகள்
கண்ணீராய் விழிகளில்

பார்க்க முடியாத காலங்கள்
கற்பனையாய் கனவினில்

கடக்க முடியாத பாதைகள்
மாயையாய் என் வழிகளில்

போட முடியாத சண்டைகள்
புன்னகையாய் உதட்டினில்

வாழ முடியாது போன வாழ்க்கையோ
வரிகளாய் என் கவிதையில் !!

எழுதியவர் : (7-May-14, 3:43 pm)
பார்வை : 190

மேலே