மதியுடையவராக வேண்டுபவர் - ஆசாரக் கோவை 8

நால்வகை யெச்சிலும் நன்கு கடைப்பிடித்
தோதா ருரையார் வளராரே யெஞ்ஞான்றும்
மேதைக ளாகுறு வார். 8 ஆசாரக்கோவை

பொருளுரை:

மேற்கூறப்பட்ட மல மூத்திரம் ஆகிய செயல்கள், இணையோடு கூடிய விருப்பமான புணர்ச்சி, வாயினால் வழங்கிய முத்த விழைச்சு என்ற நான்கு எச்சமான செயல்களைச் செய்தவிடத்து ஒன்றும் படித்தலாகாது.

எக்காலத்தும் மதியுடை யவராக வேண்டுபவர் சுத்தத்தைக் கடைப்பிடித்து இவைகளைப் பற்றி ஒன்றனையும் யாருக்கும் வாயால் சொல்ல மாட்டார், கண் உறங்க மாட்டார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-14, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

மேலே