சிறகடிக்கிறேன் தனியாக

ஓரிரு வரிகள் எழுத நினைக்கும் கணம் கண்களை நனைக்கும் உறவு உங்களையன்றி யார் தாயே இங்கு...

உங்களில் இருந்து வந்ததால் என்னமோ
என் முகம் கண்டு பசியறிகிறீர்கள்...

என் வார்த்தைகள் உங்களை தீயென சுட்டாலும்
தென்றெலன மாற்றிக்கொள்கிறீர்கள்...

ஊர் சுற்றும் எனக்காய் உறக்கம் தொலைக்கிறீர்கள்
வாசல் பார்த்து பார்த்து...

பதரில்லாத பாசமும் நிகரில்லாத நேசமும்
உங்கள் பால் முகம் காணும் போது புரிகிறது...

உங்கள் நிலாச் சோறு நீடிக்கவில்லை
உங்கள் நினைவுகளின் சோர்வில் நீடிக்கிறேன்...

சிறகடிக்கிறேன் தனியாக
சிலதை இழந்து சிலவற்றை மறந்து சிலரை புரிந்து உங்களை பிரிந்து...

பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (20-May-14, 11:29 am)
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே