வாராயோ

கனவில் வந்து கலகம் செய்யும் நீ
நினைவில் வந்தால் மௌனம் கொள்வது ஏனோ!
உனைநான் ரோஜா என்றேன்
ஏன் எனை முள்ளால் குத்துகிறாய்!
கனவில் வந்து கட்டியணைப்பதும்
நேரில் வந்தால் எட்டிமிதிப்பதும் தகுமோ!
வாழ்வில் வந்த வசந்தமே
இன்று எனை தவிக்கவிட்டாய் ஏனோ!
உதிரம் சொட்ட தேடினாலும்
நீ இன்று மாயமானதேனோ!
என் விழியானவளே
என் பார்வைகள் எங்கே!

என் மனதோடு கலந்த நீ
என் உயிரை பறிக்க துணிந்தாயோ!
பிரிவென்ற சொல்லால் என் உயிரறுத்த நீ
எங்கே சென்றாயடி ...
உன்னை கண்களால் கண்டு
மனத்தால் மணந்து
உயிரினுள்ளே குடிபுகுந்து
பதினாறு பேறும் பெற்றேன்.

நீ மணவறைக்கு செல்லும் முன்
நான் கல்லறைக்கு செல்வேன் கண்ணே ..
மணக்கோலத்தில் உனைக்கானவேண்டும்
உன் விழிசிந்தும் நீ என்மீது படவேண்டும்
அக்கணமே என்னுயிர் உறங்கிவிடும்
இது என் இறுதி ஆசை மட்டுமல்ல
அதுவே என் இறுதிச்சடங்கும் கூட...

எழுதியவர் : விஜய் சிவா (22-May-14, 1:21 am)
சேர்த்தது : விஜய் சிவா
Tanglish : vaaraayo
பார்வை : 67

மேலே