​காட்சிகளும் மாறிடுமோ ​

பொய்யும் புரட்டும் பெருகுது
மெய்யும் நாட்டில் மறையுது !
​செய்யும் தொழிலோ தேயுது
பெய்யும் மழையும் குறையுது !

வாய்மை வளைந்தே போனது
நேர்மை குனிந்தே செல்லுது
உண்மை என்றுமே உறங்குது
அறியாமை எதிலும் நிலவுது !

பகைமை நட்பை முந்துது
பொறாமை தீயே பரவுது
பொறுமை நிதானம் இழக்குது
பொய்மை உலகை ஆளுது !

சுயநலமே முன்னிலை வகிக்குது
சுரண்டிடும் எண்ணமே வளருது
சுமைகளே நமைசுற்றி நிற்குது
சூதும்வாதுமே ஓதும் வேதமாகுது !

காண்பதும் நிகழ்வதும் இவையன்றோ
தோற்பதும் துவள்வதும் நாமன்றோ !
மாறுவதும் தேறுவதும் என்றுதானோ
மகிழ்வதும் வெல்வதும் என்றுதானோ !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-May-14, 8:31 am)
பார்வை : 184

மேலே