விருந்து
கா...கா...என்று
காகம் ஒன்று
கரைந்த வண்ணம்
கூரையில் நின்றது
விருந்தாளி
வீடு வரக்கூடும் என்று
மனைவி
மறுமுனையில் இருந்து
காக்கா சாத்திரம்
கூறினாள்!
விருந்தாளி
வீட்ட வந்தால்...?
எனும் கேள்வியை
எனக்குள்
எழுப்பிக்கொண்டே
மருந்துக்கு
இருந்த பணத்தை
விருந்துக்கென்று
பொருட்கள் வாங்கினேன்!
ரோட்டில் வரும்போதே
வீட்டில்
கூக்குரல் கேட்டது
ஓடி வந்து பார்த்தேன்
காகம்
விருந்தாக்கிக்கொண்டது
வளர்த்த கோழிக்குஞ்சை!