kathal

" என் இதயக்கோவிலில் மணியோசைக்கு பதில்,,
" இடியோசை கேட்கிறதே ஏன்?!
" ஒற்றை ரோஜாவுக்காக பலப்...
" பாலைவனங்களை கடந்து வந்தேன்,,
" ரோஜாவுக்கு பதில் என் நெஞ்சில் முள் தைத்ததே,,
" என் நிழல்கூட என்னை மறுத்துவிட்டு விலகிச்செல்கிறது,,
" நீ என்னுடன் இல்லை என்பதால்!
" எதைக்கொண்டு மறைப்பேன் என் அன்பே,,
" என்னுள் புதைந்த உன் நினைவுகளை!
" என் வாழ்வின் சாபங்கள் தீரும் என்றுதான்,,
" வரம் கேட்டு உன்னிடம் வந்தேன்,,
" நீ வரம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை,,
" வார்த்தைகளால் என்னை வதைக்காதே!

எழுதியவர் : (30-May-14, 5:54 am)
பார்வை : 145

மேலே