இது தகுமா

கனவில்தானே வரச் சொன்னேன்
கண்ணெதிரே அல்லவே

நெஞ்சுகுள்தானே அழைத்தேன்
நேரில் இல்லையே

தென்றலாகத்தானே தீண்டச் சொன்னேன்
தேகத்தால் அல்லவே

கவிதையாகத்தானே அழைத்தேன்
கைப் பிடிக்க அல்லவே

பார்வையால்தானே படிக்கச் சொன்னேன்
பஞ்சணையில் இல்லையே

எதுவுமே மாட்டேன் என்றால் எப்படி !
என்னடா தண்டனை இது !

எழுதியவர் : நேத்ரா (30-May-14, 6:44 am)
பார்வை : 136

மேலே