Nethra - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Nethra
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Aug-1964
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Mar-2014
பார்த்தவர்கள்:  1040
புள்ளி:  423

என்னைப் பற்றி...

என் உந்து சக்திகள்: மொழியன்பு, இயற்கை ரசனை, இசை வேட்க்கை

என் படைப்புகள்
Nethra செய்திகள்
சர் நா அளித்த எண்ணத்தில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2014 6:14 pm

முகநூலில் படித்த செய்தி
=======================

பாரத பிரதமர் நரேந்திர மோடியின்
அறிக்கை;90நாட்களுக்கு இந்திய
தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால்
இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 2 =$1
என்ற அளவுக்கு கொண்டு வருவதாக
உறுதி அளித்து இருக்கிறார்
எனவே இந்திய
பொருட்களை பயன்படுத்தி நாமும்
உறுதுயாக நிற்போம்........இந்த
செய்தியை அனைவரிடத்திலும்
கொண்டு சேருங்கள் நண்பர்களே.......

மேலும்

கனியட்டும் காலம் ......... 11-Jun-2014 7:56 am
நிச்சயம் நண்பா..... 11-Jun-2014 7:55 am
அருமை, சாத்தியமானால் ! 10-Jun-2014 9:09 pm
இதற்காகவே மோடி அவர்களை பாராட்டலாம். 10-Jun-2014 9:05 pm
முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) rajakodi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2014 8:22 pm

கருந்தேக வானவில்லாய்
உன் புருவம் வீற்றிருக்க - மழைச்
சாரலின் ஓரத்தில் நான் !

ஒரு புருவம் நிறுத்தி
மற்றொன்றை உயர்த்தி
எனையாளும் எதிரியவள் !

புருவங்களிடையே - குட்டி
குங்கும பாலம் - கண்களுகிடையே
கனவுக்குட்டிகளை கடத்துவாளோ ?

சமயங்களில் மீசையாகிறது புருவம்
உன்னிரு விழிகளால்
நான் செரிக்கப்படும்போது !

உம்புருவ கருவனத் தோட்டத்தில்
நான் - என் நேற்றைய
கனவுகளை தேடுவதுண்டு !

- வினோதன்

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 25-Jun-2014 1:24 pm
தமிழ் அமுதை அழகு ரசம் கலந்து அசதிவிட்டீர் ! 20-Jun-2014 12:00 pm
ஹா ஹா ஹா...நன்றி அக்கா ! 14-Jun-2014 2:05 pm
நல்ல கவனிப்பு! 13-Jun-2014 8:51 pm
Nethra - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2014 8:36 pm

மயிலேறி வந்தவாஎன் மனமேறி வா கா
மலையேறி நின்றவா என் மதியேறி வா கா
கடலேறி கந்தா வாஎன் கதிதீர்க்க வா கா
கண்ணேறி வந்தவாஎன் பண்ணேறி வா கா !

நிலவொழுக நின்றவாஎன் உளமுருக வா கா
பனியொழுகு மலையவா பரிவொழுக வா கா
கனலொழுகு விழியில் கனிவொழுக வா கா
அமுதொழுகு மொழியவாஉன் அருளொழுக
வா கா !

கருப்பொருள் தந்தவாஎன் கருத்துள்ளும் வா கா
பருப்பொருளும் ஆனவாஉன் பதமலர்தா வா கா
வரும்பொருள் எல்லாம்நீ தரும்பொருளாக வா கா
வேறுபொருளே வேண்டா வடிவழகாநீ வா கா !

முன்வினை தீர்ப்பவாயென் பின்வினையும்

மேலும்

அருமையான படைப்பு வா கா என்றால் என்னவென்று தெரியவில்லையே 23-Jun-2014 3:44 pm
மிக அருமை 12-Jun-2014 9:43 pm
பக்தி மணம் கமழ்கிறது நேத்ரா. படிக்கப் பரவசம். 12-Jun-2014 9:28 pm
அருமை நேத்ரா ! 10-Jun-2014 11:59 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) nuskymim மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2014 12:04 am

காதலுக்கு
உயிர்த்துளி...!

கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!

காதலின்
வழித்தடம்...!

இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!

இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!

வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!

காதலர்களின்
வலி நிவாரணி...!

இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!

இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!

சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!

இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!

இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!

சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!

இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கீர்த்தனா...! 24-Nov-2014 10:15 pm
அருமை !!! 24-Nov-2014 10:00 pm
மறுபடியுமா....? அடடடடா..... கொடுத்து வச்ச ஆளு நீங்க.... ஜமாயுங்க......! 25-Jun-2014 11:37 am
பார்த்த ஞாபகம் இல்லை! பார்த்துவிட்டு சொல்கிறேன்! 25-Jun-2014 11:03 am
Nethra - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 7:35 pm

பச்சையம்மா உடம்பெங்கும்
வெள்ளை நரம்போடுது.
ஆறுகளும் அருவிகளும் !

$$$$$$

நாதியத்துக் கிடக்குது
நடுச்சாலையில் வெள்ளிப் பணம்.
மர நிழல் !

$$$$$$

மரகதப் பெண்கள் பவளம் போர்த்து
சாலையின் இருமருங்கும் வரிசையில்.
குல்மொஹர் மரங்கள்!

மேலும்

பூஞ்சிதறல்கள் 10-Jun-2014 9:18 am
நன்றி வித்யா. உங்கள் "வருகை" பெரும் மகிழ்வைத் தருகிறது. 10-Jun-2014 6:19 am
நன்றி நன்றி சகா ! 10-Jun-2014 6:17 am
உங்கள் ரசனை போலவே நட்பும் அழகு ! நன்றி. 10-Jun-2014 6:16 am
Nethra - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2014 6:47 am

கிறுக்கி எழுதியதாலோ
கிறுக்கு பிடித்து எழுதியதாலோ
பிடித்த கிறுக்கு அரைகுறையாய்
தெளிந்ததால் எழுதியதோ !

படித்தவுடன் கிறு கிறுவென்று
சுற்றுமே அதனாலோ.
எழுதியவுடன் கிறு கிறுவென்று
தேர்வுப் பட்டியலில்
ஏறுதே அதனாலோ !

தமிழ் கிறுக்கர்கள் எழுதியதாலோ
பொருளின்றி எழுதியதாலோ
பாடு பொருளுமின்றி எழுதியதாலோ
எதனாலோ "கிறுக்கல்கள்"
தளத்தில் அடிக்கடி தட்டுப் படுகிறதே,
என்னையும் சேர்த்துதான் !

(இப்பவே கண்ணைக் கட்டுதே,
வடிவேலு பாணியில் !)

மேலும்

என் படைப்புகளை எழுத்து தளத்தின் என் படைப்புக்களின் கீழ் பார்க்கலாம் ........ 08-Jun-2014 1:50 pm
ஹாஹா.. நன்றி நன்றி தோழமையே 08-Jun-2014 1:31 pm
நன்றி நன்றி தோழி 08-Jun-2014 1:30 pm
உங்கள் ரசனையும் அருமை. நன்றி நன்றி தோழமையே. 08-Jun-2014 1:30 pm
Nethra - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 8:22 pm

தலைகீழாய் பற்றி எரிந்து தீர்க்குது
மெழுகுவத்திகள் ரெண்டு.
கலவி.

(தலைப்பும் கீழ் தலையாய் !!)

மேலும்

நன்றி நன்றி தோழமையே 08-Jun-2014 1:44 pm
சிறந்த கற்பனை 07-Jun-2014 9:37 am
இது என்ன ஹைகுவா 07-Jun-2014 7:48 am
கற்பனை சிறப்பு 07-Jun-2014 7:21 am
T. Joseph Julius அளித்த படைப்பை (public) பொள்ளாச்சி அபி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-May-2014 2:26 pm

ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்.

பழந்தமிழ் கவிதைகளில் காணப்படும் காதல் அல்லது காமம் பற்றிய கவிமரபு ‘அகம்’ எனும் பிரிவில் அடக்கப்பட்டு அதுவும் அன்பினைந்திணை என ஒரு கூறாகவும் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு வகையும் பிறிதொரு கூறாகவும் வகுக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை நம்பி அகப் பொருள்

ஐந்திணையுடையது
அன்புடைக் காமம்
கைக்கிளையுடையது
ஒருதலைக் காமம்
பெருந்திணை என்பது
பொருந்தாக் காமம்

என மூவித அடைமொழி கொடுத்து வழங்கப் படுவனவற்றுள் அறம் பொருள் இன்பம் உள்ளிட்ட அன்பினைந்திணை உடைய அன்புடைக் காமமொன்றே ஒழுக்கமுடையதென்றும் பிற இரண்டும் குறைபாடுடையன என்றும் இதனாலேயே புலவர்களால் இவை இரண்டும் ஒதுக்கப்ப

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 19-Jul-2014 1:06 pm
அருமையான மேற்கோள் கவிதைகளுடன் சிறப்பான பயணம். 18-Jul-2014 8:46 pm
ஐயா, தங்கட்குக் கவிதைப் பொறி கிளம்பக் காரணமாய் இருந்ததில் பெருமையே. அன்றேல் இத்தனை சிறந்த கவிதை ஒன்று இத்தளத்திற்குக் கிட்டியிராது. நன்றிகள். 24-Jun-2014 10:51 am
உங்கள் இந்தக் கட்டுரை ஏதோ ஒரு பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியது..! இப்படி எழுதினேன்....: கரந்தொழுகிச் செய்ததம் காதலைப் பெற்றோர் வரந்தருவார் போல்,ஒத்து வாழ்த்தின்- பெறுஞ்சுகத்தைப் பேறாகப் பெற்ற,அப் பிள்ளைகள் நல்லொழுக்கின் ஆறாம் அதுவே செழிப்பு! கண்களே உனது கைகளாய் வந்தன! கதவென இமையும் புடவையும் இருந்தன! கைகளொ புடவையைக் காத்தது! அய்யோ! பொய்த்துணை இமைகள் பூட்டியும் திறந்தும் மெய்த்துணை போல நாடக மாடின! வைத்தகண் வாங்காப் பார்வையால் பின்னரே தைத்தனை! என்னுடல் உரோமங்கள் சிலிர்த்தவே! ஒட்டின தொடைகள்! உணர்வுகள் மயங்கின! எட்டி நடக்க என்னிரு கால்களைக் கட்டிப் போட்டதும் யாரென அறிந்திலேன்! முட்டின மார்புகள் ;மூச்சென மறைத்தேன்! ஒட்டி நடந்த தோழியர் இழுத்தே வெட்டி எடுத்தது போல்.எனை மீட்டனர்! வியர்வை உடலெலாம்! ஏதோ அயர்வை அடைந்தேன்! அதுதான் காமமோ? 21-Jun-2014 1:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

user photo

rajakodi

dindigul
Jamal Mohamed

Jamal Mohamed

சென்னை
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (51)

சிவா

சிவா

Malaysia
Shyamala

Shyamala

Pudukkottai
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (51)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே