தாயின் தத்துவம்
பூலோகம் உறங்கும்
இரவு விழித்திருக்கும்
ஆனாலும்
இரவாகவே
இராமுழுவதும் இருக்கிறேன்
உன் உறக்கம்
ரசித்த வண்ணமும்
குறும்புகள் சுவைத்த வண்ணமும்
எறும்பு மொய்திடாமல்
கரும்பாய் காத்த வண்ணமும்
ஏனெனில்
உன்னை ஈன்றவள்
நான் என்பதால்.