மழையேனும் பெய்கிறது ஆனால்

இருள் கவ்வத்தொடங்கியவுடன்
மழை நின்றுவிட்டது..
யாருமற்ற
ஈரமான சாலையில் யாரோ இருவர்
நடந்து செல்கையில்
சுற்றியிருந்த சூழல் மொத்தமும்
அவர்களையே காதலித்துக்கொண்டிருந்தது...
ஓர் மழைநாளாய்ப் பார்த்து
உன்னிடம் என்
காதலைச் சொல்லச்சொல்லி உணர்த்தினாய்..
அன்றுமுதல்
உனக்காய் காத்திருப்பதைவிட
மழைக்காய் காத்திருப்பதே மேல்
என்றாகிவிட்டது..

எழுதியவர் : சங்கீதன் (31-May-14, 4:40 pm)
பார்வை : 385

மேலே