எப்படி வர்ணிபேன்

எப்படி வர்ணிப்பேன் அவனை !!!

காதலில் விழாமல் இருந்த என்னை பிடித்து தள்ளிவிட்டான் காதலில் ...

அமைதியும் , தனிமையும் நிறைந்த
என் வாழ்கையில் ஏழு நிமிட புயலாய் வந்து
என் ஏழு ஜென்ம மகிழ்ச்சியையும் பறித்தவன்

எப்படி வர்ணிப்பேன் அவனை !!!

முதன்முதலாக பார்த்தேன்
மாநிறத்தில் ஒரு சூரியன்
"அவனது முகத்தில்"....

காற்றில் அவனது முடி விளையாடி
மறைத்தபோது உணர்தேன்
பிறை நிலா போன்ற
"அவனது நெற்றியை"....

கருப்பு , வெள்ளை முத்துக்களை
பாதுக்காக்கும் சிற்பிபோல்
அவனது இமைகள் இடையில்
தெரிந்தது "அவனது கண்கள்"....

நான் தவிப்பதுபோல் ஒன்றாய்
சேரமுடியாமல் தவிக்கும்
"அவனது இரு புருவங்கள்"...

என்னை அனுஅனுவாய் கொல்லும்
"அவனது பார்வை"........

ஏறமுடியாத வளைந்த ஏணிபோல்
நீண்ட கூர்மையான
"அவனது மூக்கு".....

வலி எதுவும் இல்லாமல்
என் உயிரை பறிக்கும்
"அவனது சிரிப்பு"......

சிரிக்கும்போது வெளிபடும் கண்ணை பறிக்கும்
பவளம்போல் உள்ள
"அவனது பற்கள்".....

தேன் நிறைந்த அவனது உதடுகள்
என் காதலை சொல்லாமல் தேனீயாய் கொட்டுகிறது...

நான் என் இதழைப்பதிபதற்காக
இறைவன் அமைத்ததுபோல்
"அவனது கன்னங்ககள்".....

வறண்ட மென்மையான நிலம்போல் இருக்கும்
அவன் கன்னத்தில் முளைத்திருக்கும்
"அவனது தாடி"......

திருடினாலும் வெல்லமுடியாத
"அவனது இதயம்".....
என்று கிடைக்கும் எனக்கு???,....

பிரம்மனின் உணர்ச்சி ரசனை
எனக்கானது பெரும் பிரச்சனை!!!

மொத்தத்தில் அவன் செதுக்காத "சிற்பம்"
தவம், இருந்தாலும் கிடைக்காத "வரம்"
அவன் இல்லாத வாழ்கை எனக்கு "சாபம்" .........


உன்னையே நினைத்து
உனக்காக உருகி
உன்னை சேரமுடியாமல் தவிக்கும்
உன் உயிர் ......???!!!

#காதலில் விழவில்லை
காதலிக்க ஆசையுமில்லை #

எழுதியவர் : srimahi (1-Jun-14, 1:07 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 157

மேலே