அன்பு காதலனே
அன்பு காதலனே...!
நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
உனை சுற்றியே என்னுலகம் இருக்கும் ...
என்றோ பேசிய காதலின் மொழி
எண்ணுகையில் என்றுமே இனிக்கும் ...
நீ சொன்ன சத்திய வார்த்தைகள்
என் நெஞ்சில் தீபமாய் ஒளிரும் ...
என் நெஞ்சில் ஏற்றிய தீபத்தை
உன்வீட்டில் ஏற்ற மனது தவிக்கும் ...
நிழலோ நிஜமோ எனை அறியாமலே
உன்னுருவம் கண்ணில் நிறைந்திருக்கும் ...
நீ பேசிய வார்த்தைகளின் ஒலியோ
என்னிதழில் புன்னகை தவழ்ந்திருக்கும்...
வார்த்தைகளில் வசப்படாத இவ்வுணர்வினை
வரிகளாக்க முடியாமல் நின்றிருக்கும் ..
இது எதுவுமே உன்னிடம் சொல்லமுடியாமல்
தயக்கமும் வெட்கமும் தடுத்திருக்கும்..
என் அன்பு காதலனிடம் நான்பேசிய
மௌனமொழிகளே என்னை புரியவைத்திருக்கும்..