ஈரோடு திருக்குறள் மலை

ஒரு திருக்குறள் -
சில நூறு மொழிபெயர்ப்புகள் ....
இரண்டு வரிகள் -
இரண்டாயிரம் ஆண்டுகள்
மூன்று பால் -
பத்து கோடி தமிழர்கள்

திருக்குறள் மதம் அல்ல -
மனிதன் மனிதனுக்கு வகுத்த வாழ்க்கை அறம்

திருக்குறள் உலகமொழியில் எழுதப்படவில்லை -
இது தமிழில் எழுத்தப்பட்ட உலகமொழி

திருக்குறள் மனப்பாடப் பகுதி அல்ல -
மனதில் பாடம் செய்யப்பட்ட பகுதி

இது தேசியக் கவியும் நேசித்த
தேசிய இலக்கியம்;
இது மகாத்மாவும் விரும்பிய
மகா சாகித்தியம்!

வெட்டுவதால் நிலைப்பது கல்வெட்டில் மட்டுமே சாத்தியம்.

1330 குறள்களையும் மலையில் கொண்டுவரும்
குறள் மலைச்சங்கத்திற்கு -
வளர்ந்து வரும் திருக்குறள் மலைக்கு -

இதோ இங்கே ஒரு பாராட்டு மலை!

எழுதியவர் : புதுயுகன் (7-Jun-14, 8:36 pm)
பார்வை : 196

மேலே