எல்லாம் அவன் செயல்

திரவியங்கள் குவிந்தபோதும்,
செல்வங்கள் சேர்ந்தபோதும்,
பதவிகள் நிறைந்தபோதும்,

கொடுத்தவன் அவனிருக்க ,
கொண்டுவந்தவன் " நான் "என்று
நினையாதே .
"நான்" அழித்து நலம் சேர்த்தால்,
நன்மைகள் பலகூடும்.

வெருண்டபோதும்,
மருண்டபோதும்,
மலையெனவே அவன் பால்
சரண் புகுந்தால் ,
மனமிரங்கி வந்திடுவான்,
கேட்டவரம் தந்திடுவான்.

அரற்றி அழுதபோதும்,
அன்பு கொண்டோர்,
விலகிச் சென்றபோதும்,
அவன் தாள் பணிந்தால்,
சஞ்சலமெல்லாம் நீக்கிடுவான்.

காப்பதும் ,கொடுப்பதும்,
அவன் செயல் என்று ,
கலங்காமல் இருந்திடு .
உன் கடமை , நெறி ,
நேர்மை மாறாமல் செய்திடு ,
நிம்மதி உன் வாழ்வில்
குவிந்திடும்.

எழுதியவர் : arsm1952 (7-Jun-14, 12:53 pm)
பார்வை : 450

மேலே