உன் இயக்கத்தில், என் உயிர் கரையும்

தண்ணீரிலாடி,
களித்துப் பின் களைத்த உந்தன்
கரம் தனில் வழிவதென்ன
நீரென்றா நினைத்தாய்?!

பொங்குங் காதலை
உள்கொண்ட எந்தன்
பஞ்சு நெஞ்சையுன் அசைவுகள் பிழிய, அதில்
வழியும் சாறது.... புரிந்துகொள் காதலி!


அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (20-Jun-14, 9:59 am)
பார்வை : 207

மேலே