மனைவிக்காக

திருமணம் என்னும் ஒற்றை நூலால் கோர்த்த
இரு மணிகள் நாங்கள்
மாழையை மாற்றியவள்
மெல்ல என் மனதையும் மாற்றினாள்
ஈரைந்து மாதங்கள் பொறுத்திருந்து
பெற்றெடுத்தாள் என் அன்னை
இருபத்தி நான்கு ஆண்டுகள் காத்திருந்து
தத்தெடுத்தாய் நீ என்னை
நீ ...
வசந்தம் தேடி வந்தவள் அல்ல
என் வரட்சியை வசந்தமாக செய்தவள்
என் உயிரின் உருவாய் அவதரித்தவள்
என்னிலும் ஒரு உயிரை பிரித்தெடுத்தவள்
என் கோபத்தின் உக்கிரத்தை பொருத்துக்கொண்டவள்
அதை குளிர வைக்கும் பக்குவத்தை தெரிந்து கொண்டவள்
என் ரசசிய அறையின் கள்ளச்சாவி
அதன் அவசியம் அறிந்த செல்ல தோழி
என் சகலமும் அடக்கும் மந்திரக்காரி
சமயம் பார்த்து சாதிக்கும் தந்திரக்காரி .
என்
கோபம் , குழப்பம்
சிரிப்பு , வெறுப்பு
வெட்கம் , துக்கம்
ஆர்வம் , அலட்சியம்
அனைத்தும் அறிந்தவள் நீ
சில நேரம் சூரியனாய் நீ சுட்டது கூட
நிலவாய் நான் குளிரத்தான் என்று
நீ இல்லாத இரவுகள் நினைவூட்டியது
காதல் கற்றுக்கொண்டேன் பலரிடம்- ஆனால்
காதல் கொண்டதோ உன்னிடம்
ஆயுரம் ஆண்டுகள் வாழ ஆசையில்லை
உன்னை அணைத்து கதை பேசும் அந்த ஒற்றை பொழுது போதும்.
என் உயிர் சொர்க்கம் போய் சேரும்